திருக்குறள்

592.

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.

திருக்குறள் 592

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.

பொருள்:

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

மு.வரததாசனார் உரை:

ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.